Monday, January 8, 2007

கவிதை கதம்பம் -1

இரவு

கறுப்புத் தாவணியில்
ஆயிரம் பொத்தல்கள்
கவர்ச்சிக் கூட்டும்
அழகுக் காட்சி.


சிகரெட்

உன் ஆசைக்கு இணங்கி
இரையான என்னை
காலிலிட்டு நசுக்கியது ஏன்?
உன் உயிரை வாங்கும் பயத்திலா?

கவிதைகள் ஆ'ரம்பம்' ...

இங்கு எனது கற்பனைகள், சிந்தனைகள் மற்றும் சமூகப் பார்வைகளுக்கு கவிதை வடிவம் கொடுக்க முனைந்திருக்கிறேன்.