வெட்கம்
முகிலுக்கு வெட்கமாம்
நிலவைக் கண்டு - ??
தன் கருமை வெளிப்படுமாம் இருளில்!!!
kavidhai,karpanai and comedy
முகிலுக்கு வெட்கமாம்
நிலவைக் கண்டு - ??
தன் கருமை வெளிப்படுமாம் இருளில்!!!
Posted by
Unknown
at
4:21 PM
3
comments
Labels: kavidhai
பற்றற்ற வாழ்வில்
மட்டற்ற இன்பம் - ??
உன் வாக்கினில் மலர்ந்த
முச்சீர் வாக்கியம் !!!
Posted by
Unknown
at
4:19 PM
1 comments
Labels: kavidhai
பாற்கடலைக் கடைந்தும்
கிடைத்திறாத இன்பம்
கிடைத்ததென்று அறிந்தேன்
உன் கடைப்பார்வையில்!!
Posted by
Unknown
at
4:14 PM
1 comments
Labels: kavidhai
நீ
நிழலென தொடர்ந்தாய்
என் மனதினுள் படர்ந்தாய்
உன் காதலை கொணர்ந்தாய்
நானோ,
செய்வதறியாது திகைத்து
காதலை வெறுத்து
என்னுள் ஒளிந்தேன்
ஒளிந்ததும் கண்டேன்
அங்கும் நீ !!!
உணர்ந்தேன் காதலென்று!!
உணர்ந்தேன்,
நிலவென ஒளிர்ந்தேன்
மலரென மலர்ந்தேன்
கடலென அலைந்தேன்
பரவசமடைந்தேன்.
இருக்கையில்,
வசையுடன் சேர்ந்து
விசையுடன் முடிந்த
என் மண வாழ்வில்
சுட்டெறிக்கும் வார்த்தையால்
தகனமுமானேன்
என் நெஞ்சினுள்!!!
Posted by
Unknown
at
3:49 PM
0
comments
Labels: kavidhai
அன்புடன்
ஆதரித்தாள்
இன்பத்தை
ஈன்றாள்
உணர்வை
ஊட்டினாள்
என்னை உயர
ஏற்றினாள்
ஐயத்தை
ஒழித்தாள்
ஓர் அன்னையாய்
உடனிருந்தாள்
என் வாழ்வில்
அவள் !!!
Posted by
Unknown
at
3:26 PM
0
comments
Labels: kavidhai
உன்னைக் கண்டேன்
உலகை மறந்தேன்
உன் அன்பை கண்டேன்
என்னை மறந்தேன்
நீ எனக்கென உணர்ந்தேன்
விண்ணில் மிதந்தேன்
நீ இல்லையென அறிந்தேன்
உயிரை ம(து)றந்தேன்.
Posted by
Unknown
at
3:14 PM
0
comments
Labels: kavidhai
அன்று
வேடன் எய்த அம்பில்
உயிர் பிழைத்தேன், மடிந்தேன்
இன்று
நீ எய்த அம்(ன்)பில் !!
Posted by
Unknown
at
3:09 PM
0
comments
Labels: kavidhai