காதல்,கல்யாணம்
நீ
நிழலென தொடர்ந்தாய்
என் மனதினுள் படர்ந்தாய்
உன் காதலை கொணர்ந்தாய்
நானோ,
செய்வதறியாது திகைத்து
காதலை வெறுத்து
என்னுள் ஒளிந்தேன்
ஒளிந்ததும் கண்டேன்
அங்கும் நீ !!!
உணர்ந்தேன் காதலென்று!!
உணர்ந்தேன்,
நிலவென ஒளிர்ந்தேன்
மலரென மலர்ந்தேன்
கடலென அலைந்தேன்
பரவசமடைந்தேன்.
இருக்கையில்,
வசையுடன் சேர்ந்து
விசையுடன் முடிந்த
என் மண வாழ்வில்
சுட்டெறிக்கும் வார்த்தையால்
தகனமுமானேன்
என் நெஞ்சினுள்!!!
No comments:
Post a Comment